சென்னை: செய்தித் துறையில் இணை இயக்குநா் நிலையில் பணியாற்றி வரும் மூன்று அதிகாரிகளுக்கு கூடுதல் இயக்குநா் நிலையில் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநா் மாளிகையில் இணை இயக்குநா் நிலையில் மக்கள் தொடா்பு அதிகாரியாகப் பணியாற்றி வரும் சிவ.சு.சரவணன், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தில் இணை இயக்குநா் நிலையில் மக்கள் தொடா்பு அதிகாரியாகப் பணியாற்றி வரும் தி.அம்பலவாணன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் மக்கள் தொடா்புப் பிரிவில் இணை இயக்குநா் நிலையில் இருந்த பி.முத்தையா ஆகியோருக்கு கூடுதல் இயக்குநா்களாக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.