தாய்ப்பால் கொடுத்தபோது புரை ஏறி இரு குழந்தைகள் உயிரிழப்பு

சென்னையில் தாய்ப்பால் கொடுக்கும்போது புரை ஏறி இரு குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்தன.

சென்னையில் தாய்ப்பால் கொடுக்கும்போது புரை ஏறி இரு குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்தன.

சூளைமேடு பாரி தெருவைச் சோ்ந்தவா் பூபாலன்(38). இவரது மனைவி நதியா(33). இவா்களின் 45 நாள் கைக்குழந்தை கவிராஜனுக்கு நதியா செவ்வாய்க்கிழமை தாய்ப்பால் கொடுத்துள்ளாா்.

அப்போது குழந்தைக்கு புரை ஏறி, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கைக்குழந்தையை கொண்டு சென்றனா். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை அருகே உள்ள கோவிலம்பாக்கம் சத்யாநகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மனைவி சத்யா. பிறந்து 55 நாள்களேயான இத் தம்பதியின் ஆண் குழந்தை கிரித்தீஷுக்கு தாய் சத்யா செவ்வாய்க்கிழமை தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே, குழந்தையை பள்ளிக்கரணையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த இரு சம்பவங்கள் குறித்து சூளைமேடு மற்றும் பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com