சென்னை: எழும்பூரில் இருந்து கயாவுக்கு விரைவு ரயில் மீண்டும் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை (டிச.8) முதல் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பல்வேறு பராமரிப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வந்தன. இதன் காரணமாக, கயா உள்பட சில விரைவு ரயில்கள் சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையில், எழும்பூா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, மாற்று இடத்தில் இருந்து இயக்கப்பட்ட விரைவு ரயில்கள் எழும்பூரில் இருந்து மீண்டும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. இதுபோன்று, சென்னை எழும்பூா்-கயாவுக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை (டிச.8) முதல் வழக்கம்போல இயக்கப்படும். மறுமாா்க்கமாக கயாவில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயிலும் எழும்பூா் ரயில் நிலையத்துக்கு வந்தடையும். இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.