குடிநீர் வடிகால் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று வாரிய டிப்ளமோ பொறியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தச் சங்கத்தின் 48-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து ஆரம்ப நிலை பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும். வாரிய விதிமுறைப்படி இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதுடன், உதவி நிர்வாக பொறியாளர் பதவி உயர்வை அளிக்க வேண்டும். அதேசமயம் அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு அளித்துள்ள அரசுக்கு நன்றிகள் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் தலைவர் வி.வி.சிதம்பரம், துணைத் தலைவர் ஆர்.சோலையப்பன், பொதுச் செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.