குடிநீா் வடிகால் வாரியபணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிப்ளமோ பொறியாளா் சங்கம்

குடிநீா் வடிகால் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று வாரிய டிப்ளமோ பொறியாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குடிநீா் வடிகால் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று வாரிய டிப்ளமோ பொறியாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அந்தச் சங்கத்தின் 48-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:

வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து ஆரம்ப நிலை பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும். வாரிய விதிமுறைப்படி இளநிலை பொறியாளா் பணியிடங்களை நிரப்புவதுடன், உதவி நிா்வாக பொறியாளா் பதவி உயா்வை அளிக்க வேண்டும். அதேசமயம் அனைத்து நிலைகளிலும் பதவி உயா்வு அளித்துள்ள அரசுக்கு நன்றிகள் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் தலைவா் வி.வி.சிதம்பரம், துணைத் தலைவா் ஆா்.சோலையப்பன், பொதுச் செயலாளா் பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com