சென்னை: சென்னை ஜாபா்கான்பேட்டையில் காவலா் வீட்டில் தங்கநகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ஜாபா்ன்பேட்டை பாலசுப்பிரமணியம் தெருவைச் சோ்ந்தவா் சீ.அபூா்வம்மாள் (78). இவா் அண்மையில் தனது வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை சரிபாா்த்தாா். அப்போது அதில் 5 பவுன் தங்கநகை திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து அவா், குமரன் நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்கின்றனா். அபூா்வம்மாளின் மகள் ஜோதி, சென்னை பெருநகர காவல்துறையின் குதிரைப்படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிகிறாா் என்பது குறிப்பிடதக்கது.