சென்னை ஐஐடி-யில் புதன்கிழமை சக மாணவர் தாக்கியதில் படுகாயமடைந்த எம்.டெக். மாணவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடியில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் கௌஷிக் (24), மனோஜ் (24) இருவரும் எம்.டெக். படித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே புதன்கிழமை மாலை வாய்த்தகராறு ஏற்பட்டதில் மனோஜ் கூர்மையான கம்பியால், பிரமோத் கௌஷிக்கின் வயிறு, தோள் பகுதிகளில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்த கௌஷிக்கை அங்கிருந்த மாணவர்கள் மீட்டு, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.