சனிக்கிழமை (12.1.2019) மாலை 6 மணிக்கு புத்தகக் கண்காட்சியின் இலக்கிய நிகழ்ச்சியில் திரைப்பாடல் இலக்கியம் என்ற தலைப்பில் கவிஞர் முத்துலிங்கம் பேசுகிறார். நம்பிக்கை நம் கையில் என்ற தலைப்பில் நெல்லை கவிநேசனும், வாழ்க்கைக்குத் தேவை மருத்துவம் என்ற தலைப்பில் டாக்டர் துளசி குமாரும் உரையாற்றுகிறார்கள். பபாசி செயற்குழு உறுப்பினர் இராம. மெய்யப்பன் வரவேற்புரையும், நிரந்தர புத்தகக் காட்சி உறுப்பினர் சு.பிரபாகரன் நன்றியுரையும் ஆற்றுகிறார்கள்.