வியாழக்கிழமை (ஜன. 17) மாலை 6.00 மணிக்கு நடைபெறும் புத்தகக் கண்காட்சியின் இலக்கிய நிகழ்ச்சியில் தலைப்பைத் தேடி என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பேசுகிறார். புத்தகங்களும் சமுதாயமும் என்ற தலைப்பில் சென்னை வடக்கு கோட்டம், மாநில வரிகள், இணை ஆணையர் அ.ப.தேவேந்திர பூபதி பேசுகிறார். ஈடு இல்லா இருவர்கள் என்ற தலைப்பில் விஜய் பிரபாகரன் பேசுகிறார். பபாசி இணைச் செயலாளர் எஸ்.சுரேஷ்குமார் வரவேற்புரையும், செயற்குழு உறுப்பினர் ஆர்.மாசிலாமணி நன்றியுரையும் ஆற்றுகிறார்கள்.