காணும் பொங்கலையொட்டி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், புறநகர் ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காணும் பொங்கலையொட்டி, மெரீனா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் அதிக மக்கள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், புறநகர் ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், புறநகர் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ரயில்வே போலீஸார் 150 பேரும், ரயில்வே பாதுகாப்புப் படையினர் 100 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.