சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்.செல்வி (50) உடல் நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகில் உள்ள மேநல்லூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மறைந்த செல்விக்கு தினமணி நாளிதழ் சென்னை பதிப்பில் அச்சகப் பிரிவில் பணிபுரியும் ஆர்.லோகநாதன் உள்பட இரு மகன்கள், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். தொடர்புக்கு: 97912 09469.