கோயம்பேடு தனியார் ஆம்னி பேருந்து நிலையத்தில் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர்.அவரது பையை சோதனையிட்டதில் 7 கிலோ கஞ்சாவை கடத்திச் செல்வது தெரியவந்தது.
விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பொ.திமுடு (36) என்பதும், சேலத்துக்கு கஞ்சாவைக் கடத்திச் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், திமுடுவை கைது செய்தனர்.