சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை கிண்டியில் ஜூலை 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.


சென்னை கிண்டியில் ஜூலை 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதிநிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்த உள்ளன.  கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ள இந்த முகாமில், 35 வயதுக்குள்பட்ட 8 ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரையும், ஐடிஐ மற்றும் தொழில்நுட்பப் படிப்புகள் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்(மாற்றுத்திறனாளிகள் உள்பட) பங்குபெற்று தகுதிக்கேற்ற பணி வாய்ப்பை பெறலாம்.
அதே போல் இதில் பங்கு பெற்று பணியாளர்களைத் தேர்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள், முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com