கோடம்பாக்கம் தெற்கு சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார்(52). இவர் பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை திருடுபோனது. இது குறித்த புகாரின்பேரில் கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.