பெரியார் ஐ.ஏ.எஸ் அகாதெமி சார்பில் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் அரசுப் பணித் தேர்வுகள் குறித்த இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து பெரியார் ஐ.ஏ.எஸ் அகாதெமி இயக்குநர் கா.அமுதரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பணிகளின் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் பெரியார் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் தொடங்க உள்ளன. தேர்வினை எதிர் கொள்ளும் எளிமையான வழிமுறைகளை எடுத்துரைக்கும் இலவச கருத்தரங்கம் மற்றும் இலவச பயிற்சி வகுப்புகளை பெரியார் ஐ.ஏ.எஸ் அகாதெமி ஏற்பாடு செய்துள்ளது.
ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்தக் கருத்தரங்கில் துறை சார்ந்த வல்லுநர்கள், வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் அரசுப் பணியில் உள்ள உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க உள்ளனர். இதில் பங்கேற்க விரும்புவோர் 044 2661 8056, 99406 38537 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு இருக்கைகளைப் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.