காங்கிரஸ் சார்பில் போட்டியிட 250 பேர் மனு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 250 பேர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 250 பேர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.
 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து, சத்தியமூர்த்திபவனில் கடந்த 2 நாள்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 9 தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 250 பேர் விருப்ப மனு அளித்தனர். திருவள்ளூர் (தனி) தொகுதியில் அதிகபட்சமாக 62 பேர் மனு அளித்தனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று அவர் சார்பாக அக்கட்சியினர் மனுக்கள் அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com