தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 28 ஆண்டுகளாகப் பணியாற்றிய கே.ராமசுவாமி (அச்சகப் பராமரிப்புப் பிரிவு ஊழியர்) ஏப்ரல் 30-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார்.
இவருக்கான பிரிவுபசார விழா சென்னை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை மேலாளர் டி.ஜோதி நாராயணன் (உற்பத்தி-மெக்கானிக்கல்), துணை மேலாளர் சதாசிவம் (உற்பத்தி), துணை மேலாளர் ஆர்.பாலகுரு (பணியாளர் நலன்) மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற கே.ராமசுவாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.