அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கோடை கொண்டாட்டம்

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வரும் கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் தினமும் ஏராளமான குழந்தைகள், மாணவ - மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வரும் கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் தினமும் ஏராளமான குழந்தைகள், மாணவ - மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். 
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் குழந்தைகள், இளைஞர்கள், இலக்கிய ஆர்வலர்களைக் கவரும் வரையில் கோடைக் கொண்டாட்டம் என்ற தலைப்பில் அறிவுத் திறனை வளர்க்கும் பயிற்சிகள், சொற்பொழிவுகள், போட்டித் தேர்வுக்கான கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. 
இதில் பங்கேற்கும் 4 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதுவரை கலந்து கொள்ளாத குழந்தைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்க விரும்பினால் 044-2220 1011-லும் அல்லது www.annacentenarylibrary.com என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என பொது நூலகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com