தெருவோரக் குழந்தைகளின் உரிமைக்கு திமுக துணை நிற்கும்

தெருவோரக் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட திமுக என்றைக்கும் துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தெருவோரக் குழந்தைகளின் உரிமைக்கு திமுக துணை நிற்கும்


தெருவோரக் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட திமுக என்றைக்கும் துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சுட்டுரையில் கூறியிருப்பது:
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பெருமைமிகு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தெருவோரக் குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை தென்னிந்திய அணி வென்றிருப்பது சிறப்பான நிகழ்வாகும்.
தென்னிந்திய அணியில் சென்னையைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், பால்ராஜ், நாகலட்சுமி, மோனிஷா ஆகிய நால்வரும் பங்கேற்று வெற்றிக்கு வித்திட்டிருப்பது பாராட்டுக்குரியது. நால்வருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
தெருவோரக் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், அவர்களின் திறமைகள் மிளிர்ந்து இத்தகைய சாதனைகள் படைக்கவும் திமுக என்றும் துணை நிற்கும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com