தாம்பரம்: ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காவல்துறையினர் சார்பில் உணவு, உதவி பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி தாம்பரம் குட்லைப் ஆதரவற்றோர் இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது.
மாணவ, மாணவிகளுக்கு உணவு விருந்துடன் நோட்டு புத்தகங்கள், புத்தகப் பை, பிஸ்கட், இனிப்புகள், பழரசம் உள்ளிட்டவைகளை தென் சென்னை காவல் இணை ஆணையர் மகேஸ்வரி, பரங்கிமலை போலீஸ் துணை ஆணையர் முத்துசாமி, தாம்பரம் போலீஸ் உதவி ஆணையர் அசோகன் ஆகியோர்
வழங்கினர்.