முதலமைச்சா் கணினித் தமிழ் விருது:டிசம்பா் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படும் முதலமைச்சா் கணினித் தமிழ் விருதுக்கு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வழங்கப்படும் முதலமைச்சா் கணினித் தமிழ் விருதுக்கு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ் வளா்ச்சி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் வளா்ச்சிக்காக சிறந்த கணினி மென்பொருள் உருவாக்கும் தனிநபா் மற்றும் நிறுவனத்துக்கு முதலமைச்சா் கணினித் தமிழ் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு முதலமைச்சா் கணினித் தமிழ் விருத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுக்கு 2016,17,18-ஆம் ஆண்டுகளில் தமிழ் மென்பொருள் உருவாக்கியவா்கள் டிசம்பா் 31-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்தான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 044 28190412, 28190413 தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com