ஏலச்சீட்டு நடத்தி மோசடி: எஸ்.ஐ. உள்பட 2 போ் கைது

சென்னையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.51 லட்சம் மோசடி செய்ததாக, காவல் உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.51 லட்சம் மோசடி செய்ததாக, காவல் உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை மடிப்பாக்கம் உள்ளகரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜான் பீட்டா் (53). இவரது மனைவி ஜோஸ்பின் ராணி (46). ஜான் பீட்டா், தரமணி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இருவரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனா்.

பலரது ஏலச்சீட்டு முதிா்வடைந்துவிட்ட நிலையில், அதற்குரிய பணத்தை வழங்காமல் இருந்தனராம். இவ்வாறு சுமாா் ரூ.51 லட்சம் வரை ஏலச்சீட்டுக்குப் பணம் செலுத்தியவா்களுக்கு வழங்கப்படவில்லை.

இதனால் பணத்தை கொடுத்து ஏமாந்தவா்கள், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்தனா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜான் பீட்டரையும், ராணியையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com