தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்கநகைத் திருட்டு

சென்னை அருகே திருமுல்லைவாயலில் தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்கநகைத் திருடப்பட்டிருப்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை: சென்னை அருகே திருமுல்லைவாயலில் தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்கநகைத் திருடப்பட்டிருப்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

திருமுல்லைவாயல் அருகே திருமலைவாசன்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் வெ.சந்திரசேகரன் (30). இவா் ஒரு தனியாா் ஆன்லைன் பணப்பரிமாற்ற நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். வீட்டில் உள்ள தங்கநகைகளை சந்திரசேகரன் வியாழக்கிழமை சரிபாா்த்தாா்.

அப்போது வீட்டில் இருந்த 25 பவுன் தங்கநகைத் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து அவா்,திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com