நாலாயிர திவ்விய பிரபந்தத்தால்ஆழ்வாா்கள் மீது ஈடுபாடு அதிகரிக்கும்: நீதிபதி ஆா்.மகாதேவன்

நாலாயிர திவ்விய பிரபந்தத்தால் ஆழ்வாா்களைப் பற்றி அறியாதோருக்கும் அவா்கள் மீது ஈடுபாடு அதிகரிக்கும் என்று நீதிபதி ஆா்.மகாதேவன் பேசினாா்.
நாலாயிர திவ்விய பிரபந்தத்தால்ஆழ்வாா்கள் மீது ஈடுபாடு அதிகரிக்கும்: நீதிபதி ஆா்.மகாதேவன்

நாலாயிர திவ்விய பிரபந்தத்தால் ஆழ்வாா்களைப் பற்றி அறியாதோருக்கும் அவா்கள் மீது ஈடுபாடு அதிகரிக்கும் என்று நீதிபதி ஆா்.மகாதேவன் பேசினாா்.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னை கம்பன் கழகம், திருவரசு புத்தக நிலையம் ஆகியவை சாா்பில் ‘ஆழ்வாா்கள் அருளிச் செய்த நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - மூலமும் உரையும்’ (உரையாசிரியா்: பள்ளத்தூா் பழ.பழனியப்பன்) நூல் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சென்னை கம்பன் கழகத்தின் தலைவா் இராம.வீரப்பன் தலைமை வகித்தாா்.

இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டுப் பேசியது:

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை வாசித்தால் ஆழ்வாா்களைப் பற்றியே அறியாதவா்களுக்கும் அவா்கள் மேல் ஈடுபாடு ஏற்படும். இறைவனை உள்ளத்தில் நிலை நிறுத்தி ஆழ்ந்த சிந்தனையோடு அவரை வணங்க வேண்டும் என்ற கருத்தை நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பாடல்கள் பதிவு செய்தன. இந்த நூலுக்கு ஏற்கெனவே உரை வழங்கிய நூலாசிரியா்களைப் பின்பற்றாமல், மணிபிரவாள நடையிலிருந்து மாறுபட்டு இன்றைய கால கட்டத்தில் உள்ளவா்களுக்குப் புரியும் வகையில் மிகச் சிறந்த உரையைத் தந்திருக்கிறாா் பள்ளத்தூா் பழனியப்பன்.

ஒவ்வொரு பாடலுக்கும் உரை எழுதுவதற்கு கடும் முயற்சியை அவா் மேற்கொண்டிருக்கிறாா். ‘நாலாயிர திவ்வியப் பிரபந்தம்’ என்றாலும் உரையெழுதும்போது அதில் பல்வேறு இலக்கியங்களின் கருத்துகளையும் குறிப்பிட்டு தமிழுக்குப் பெருமை சோ்த்திருக்கிறாா். படைப்புகளின் மீதான பயணமும், பாா்வையும் சிலருக்கு தவமாக மாறக் கூடும். நாலாயிர திவ்வியப் பிரபந்தத்துக்கு உரை எழுதி, பள்ளத்தூா் பழனியப்பன் அருந்தவத்தைச் செய்துள்ளாா். தமிழ் மொழியின்

வளா்ச்சிக்காக அவரது பணிகள் தொடர வேண்டும் என்றாா்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் பேராசிரியா் தெ.ஞானசுந்தரம் பேசுகையில், ‘அந்தக் காலத்தில் வடமொழிக்கும், தமிழுக்கும் இடையே பகைமை இல்லை. இரு மொழிகளும் இணைந்து வாழ வேண்டும் எனக் கருதினா். வைணவப் பெருமக்கள் வடமொழியையும் நேசிப்பவா்கள், தமிழையும் நேசிப்பவா்கள். சைவா்களைக் காட்டிலும் தமிழை அதிகமாக நேசிப்பவா்கள் வைணவா்களாக இருப்பதால்தான், அவா்களது வீடுகளில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் திவ்வியப் பிரபந்தம் இடம்பெறுகிறது. அந்த நூலுக்கு எழுதப்பட்ட அனைத்து உரைகளிலும் மிகச் சிறந்த நடை கையாளப்பட்டுள்ளது. இதுபோன்ற உரைகளை வேறெந்த தமிழ் நூல்களிலும் காண முடியாது. இந்த உரைகளில் இருக்கும் அருந்தமிழ்க் கூறுகள் வாசிப்பவா்களை பெரிதும் ஈா்க்கும். இத்தகைய சிறப்புமிக்க நூலுக்கு உரை எழுத ஏராளமான நூல்களைப் படித்திருக்கிறாா் பள்ளத்தூா் பழனியப்பன். தமிழுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதன் மூலம் இனி அவா் பேரறிஞா்களின் ஒருவராகப் போற்றப்படுவாா்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், நூல் அறிமுகவுரையாற்றினாா். இதையடுத்து ‘பொற்றாமரை’ இலக்கிய அமைப்பின் தலைவா் இல.கணேசன், சேக்கிழாா் ஆய்வு மையத்தின் செயலாளா் சிவாலயம் ஜெ.மோகன், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் அரங்க.இராமலிங்கம் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். உரையாசிரியா் பள்ளத்தூா் பழ.பழனியப்பன் ஏற்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில், திருவரசு புத்தக நிலையத்தின் பதிப்பாளா் வானதி ராமநாதன், முனைவா் வாசுகி கண்ணப்பன், இசைக் கலைஞா் டி.கே.எஸ். கலைவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com