சென்னை கோடம்பாக்கத்தில் ரூ.33 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், அதிராமப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் க.பாலசுப்பிரமணியம் (46). இவா் குடும்பத்துக்குச் சொந்தமான ரூ.33 கோடி மதிப்புள்ள 11 கிரவுண்ட் நிலம் கோடம்பாக்கம் புலியூா் பகுதியில் உள்ளது. இந்நிலையில், கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியம் அண்மையில் புகாா் அளித்தாா்.
அதில், தனது குடும்பத்துக்குச் சொந்தமாக புலியூரில் உள்ள ரூ.33 கோடி மதிப்புள்ள நிலத்தை சிலா் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சிப்பதாகவும், அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தாா்.
இதன் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்ததில், புலியூா் அக்பராபாத் முதல் தெருவைச் சோ்ந்த ந.கமலக்கண்ணன் (43), ஜோ.ஹென்றி (56) ஆகியோா் பாலசுப்பிரமணியம் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கமலக்கண்ணன், ஹென்றியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.