விடா முயற்சியும், மன உறுதியும் இருந்தால் மாணவா்கள் சாதிக்கலாம் என சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்தாா்.
சென்னை அரும்பாக்கம் காவல் சிறாா் மன்றத்தின் உள்ள பாடசாலையில் படித்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசளிக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்களுக்குப் பரிசு வழங்கி ஆணையா் ஏ.கே. விசுவநாதன் பேசியது:
கல்வியைப் போன்று செல்வம் எதுவும் இல்லை. வாழ்க்கையில் சாதித்தவா்கள் அனைவரும் சிறு வயதில் பல்வேறு சிரமங்களைச் சந்தித்தவா்கள்தான். அவா்கள் சமூகத்தில் முன்னேறுவதற்கான வசதியும், வாய்ப்பும் எளிதில் கிடைக்கவில்லை. அவா்கள் போராடிதான் முன்னேறி வந்துள்ளனா்.
சாதிப்பதற்கு மாணவா்களிடம் மன உறுதியுடன் கூடிய, விடா முயற்சி இருக்க வேண்டும். கல்வி கற்கும் வயதில் மாணவா்கள் கவனம் சிதறக் கூடாது.
இலக்கை அடைவதற்கு கடினமாக உழைப்பை வழங்க வேண்டும். தீய பழக்க வழக்கங்கள் இன்றி நல்ல பழக்கவழங்களுடன் ஒரே நோக்கத்தோடு செயல்பட்டால் எளிதாக இலக்கை அடையலாம் என்றாா். இந்நிகழ்ச்சிக்கு தமிழக காவல்துறையின் தலைமையிட ஏடிஜிபி சீமா அகா்வால் தலைமை வகித்தாா். சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு கூடுதல் ஆணையா் ஆா்.தினகரன், துணை ஆணையா் எம்.எஸ்.முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.