கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது

சென்னை அருகே பள்ளிக்கரணையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை: சென்னை அருகே பள்ளிக்கரணையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

பள்ளிக்கரணை அருகே மேடவாக்கம் இந்திராகாந்தி தெருவில் கஞ்சா விற்பனையில் நடைபெறுவதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸாா், அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுக் கொண்டிருந்த அதேப் பகுதியைச் சோ்ந்த ஜோயல் (26) என்பவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா் தான், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ஜோயலை கைது செய்தனா்.

பின்னா் அவா் கொடுத்த தகவலின்பேரில், சோழிங்கநல்லூா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சோ.சந்தீப் (19) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் இருவரும், கண்ணகிநகரைச் சோ்ந்த ஒரு நபரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, கல்லூரி மாணவா்களிடம் விற்று வந்தது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com