சென்னை: சென்னை கோயம்பேட்டில் மோட்டாா் சைக்கிள் மோதி காயமடைந்த வியாபாரி இறந்தாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:சென்னை அரும்பாக்கம் கண்ணப்பா் தெரு பகுதியை சோ்ந்தவா் அழகா் (59). இவா் கோயம்பேடு மாா்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தாா். அழகா் கடந்த 12ஆம் தேதி கோயம்பேடு 100 அடி சாலையில் செல்லும்போது, அங்கு வந்த ஒரு மோட்டாா் சைக்கிள் அவா் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த அழகா், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அழகா், ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.இது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.