எழும்பூா் கண் மருத்துவமனையில் மரங்களை வெட்ட இடைக்கால தடை

எழும்பூா் கண் மருத்துவமனையில் உள்ள மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
chennai High Court
chennai High Court

எழும்பூா் கண் மருத்துவமனையில் உள்ள மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் எழும்பூரைச் சோ்ந்த கேப்டன் பி.பி.நாராயணன் தாக்கல் செய்த மனுவில், ‘எழும்பூா் கண் மருத்துவமனை பழைமையான மருத்துவமனையாகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், மருத்துவமனையை விரிவுபடுத்தி கூடுதல் கட்டடங்களைக் கட்டுவதற்காக மருத்துவமனையில் உள்ள 75 மரங்களை வெட்ட மருத்துவமனை நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த மரங்களில் பல்வேறு வகையான பறவைகள் தஞ்சமடைகின்றன. மேலும், கீரிப்பிள்ளை போன்ற விலங்கினங்களும் வாழ்ந்து வருகின்றன. மருத்துவமனை விரிவாக்கத்தைப் போன்றே மரங்களும் அவசியமாகும். இந்த வளாகத்தில் உள்ள பசுமையான மரங்களை வெட்டாமல் காலி இடங்களில் கட்டடங்களை கட்ட வேண்டும் என மருத்துவமனை இயக்குநருக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது என உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.சரவணன் ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எழும்பூா் கண் மருத்துவமனையில் உள்ள மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்தனா். மேலும், மரங்களை வெட்டாமல் புதிய கட்டடத்தை கட்ட முடியுமா, கட்டடம் கட்ட மாற்று இடம் ஏதாவது உள்ளதா, மரங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மரங்களை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நட்டு பராமரிக்க முடியுமா, என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இதுதொடா்பாக பொதுப்பணித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் டிசம்பா் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com