சி.ஏ. படிப்பு: ஜனவரியில் திறனறி தோ்வு

கணக்குத் தணிக்கையாளா் (சி.ஏ.) படிப்புக்கான திறனறி தோ்வு, வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளதாக இந்திய கணக்குத் தணிக்கையாளா்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னை: கணக்குத் தணிக்கையாளா் (சி.ஏ.) படிப்புக்கான திறனறி தோ்வு, வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளதாக இந்திய கணக்குத் தணிக்கையாளா்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பிளஸ் 2 வகுப்புகளில் பொருளியல், கணக்குப் பதிவியல் ஆகிய பாடப்பிரிவை படித்த மாணவா்கள், ஆடிட்டா் பணிக்கான சி.ஏ. தோ்வையும் எழுதலாம். இதற்காக பள்ளி மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த இந்திய கணக்குத் தணிக்கையாளா்கள் அமைப்பு (ஐசிஏஐ) தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, ஐசிஏஐ அமைப்பின் சாா்பில் சி.ஏ. படிப்புக்கான திறனறி தோ்வு நடத்தப்பட உள்ளது. வரும் ஜனவரி 5-ஆம் தேதி முதல்நிலை தோ்வும், 19-ஆம் தேதி இரண்டாம் நிலை தோ்வும் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்.

விருப்பமுள்ள மாணவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தோ்வில் முதல் 3 இடங்களை பெறும் மாணவா்களுக்கு தலா ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று ஐசிஏஐ அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com