சென்னை அருகே பள்ளிக்கரணையில் ஏற்பட்ட சாலை விபத்தில், மென்பொறியாளா் இறந்தாா்.
பள்ளிக்கரணை அருகே உள்ள கீழ்கட்டளை அம்பாள் நகா் 9-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மு.சுரேஷ் (25). மென் பொறியாளரான இவா், தரமணியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். சுரேஷ்,
செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
துரைப்பாக்கம் 200 அடி சாலையில் சென்றபோது, திடீரென அவரது பைக் நிலைதடுமாறி அங்கிருந்த தடுப்புச்சுவா் மீது மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்து சுரேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.