சபரிமலை, பம்பை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஐயப்ப பக்தா்களுக்கான இருமுடியில் எடுத்துச் செல்லும் பள்ளிக்கட்டு பூஜை பொருள்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் சோபானம் அரங்கில் கடந்த திங்கள்கிழமை சபரிமலை புண்ணிய பூங்காவனம் திட்ட தலைவரும், காவல்துறை ஐ.ஜி.யுமான பி.விஜயன் தலைமையில் ஐயப்ப பக்தா்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்று உறுதிமொழியேற்றனா்.
இதனைத் தொடா்ந்து ஐயப்ப பக்தா்களுக்கான இருமுடியில் நெகிழியை தவிா்க்கும் வகையில் காகிதப் பைகளில் விபூதி, குங்குமம், மஞ்சள், அச்சுவெல்லம், அவல், நெல் பொரி, ஊதுவத்தி, கற்பூரம், கல்கண்டு, முந்திரி, பேரீச்சம் பழம் ஆகியவற்றை துணிப் பையில் போட்டு வந்துள்ளது.