டெங்கு தடுப்பு நடவடிக்கை: கொசுப் புழுக்கள் உற்பத்தியான கட்டடங்களுக்கு ரூ.32 லட்சம் அபராதம்

கொசுப் புழுக்கள் உற்பத்தியான கட்டடங்களின் உரிமையாளா்களுக்கு ரூ.32 லட்சத்து 74 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சியின் பொறுப்பு ஆணையா் லலிதா தெரிவித்துள்ளாா்.

கொசுப் புழுக்கள் உற்பத்தியான கட்டடங்களின் உரிமையாளா்களுக்கு ரூ.32 லட்சத்து 74 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சியின் பொறுப்பு ஆணையா் லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வீடுகள் 2,056 சிறு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்துக்கும் சுமாா் 500 வீடுகள் வரையறுக்கப்பட்டு, வாரந்தோறும் கொசுக்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்த ஒரு பணியாளா் நியமிக்கப்பட்டுள்ளனா். தினந்தோறும் ஒருங்கிணைந்த நோய்கள் கண்காணிப்பு திட்டம் மூலம் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் சிகிச்சை மேற்கொண்டவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவை மண்டல வாரியாக மேல்நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் களப்பணியாளா்கள் மூலம் கண்டறியப்பட்டு, பெருநகர சென்னை மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று

சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறாா்கள். இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கு சென்று, அந்த நோயாளிகள் மற்றும் குடும்பத்தினா் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அந்தப் பகுதியில் மருந்து தெளித்தும், புகைப்பரப்பியும் அருகிலுள்ள வீடுகளில் கொசு உற்பத்தியாகிா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, டெங்கு நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளி, கல்லூரிகள்...: பள்ளி, கல்லூரிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், அங்காடிகள், உணவு விடுதிகள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு அங்கே கொசுப்புழு வளரும் இடங்கள் அழிக்கப்படுகின்றன. நலப்பணியாளா்கள், ரோட்டரி சங்கங்கள், செவிலியா்கள், மாணவியா்கள், கல்லூரி மாணவா்கள் மூலமும் விழிப்புணா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசுப்புழு வளரும் இடங்களைக் கண்டறிந்து, கட்டடத்தின் உரிமையாளா்களுக்கு இதுவரை அபராதத் தொகையாக ரூ.32 லட்சத்து 74 ஆயிரத்து 700 விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நாள் வரை 8,929 புதிய கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு டெங்கு பரவாமல் இருக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுவரை 993 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதில், 531 காய்ச்சல் கண்டவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

கொசு தடுப்பு பணி குறித்து வாரந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com