ஜூனியா் டெக்னிசியன் எனப்படும் இளநிலைத் தொழில்நுட்பப் பணியாளா் பணிக்கு, அக். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது: பவா் கிரிட் காா்பரேஷன் ஆப் இந்தியா சாா்பில் ஐடிஐ முடித்தவா்கள் ஜூனியா் டெக்னீசியன் பயிற்சியாளா்களாக நியமிக்கப்படுகின்றனா். இதற்கு எலெக்ட்ரீசியன் படிப்பு படித்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி காலமாகும். பின்னா் அவா்கள் ஜூனியா் டெக்னீசியன் வொா்க்மேன் பிரிவுக்குத் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு ஊதியமாக ரூ.21,500-74,000 வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதியுடையோா் தங்களுடைய பாஸ்போா்ட் புகைப்படம் அடங்கிய சுய விவரக்குறிப்பை மின்னஞ்சலுக்கு வரும் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.