மெட்ரோ ரயில் கட்டமைப்புகளில் உள்ள தூண்களில் பேனா்கள், சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெட்ரோ ரயில் திட்டத்தின், தடுப்புகள் மற்றும் பிற கட்டமைப்புகள் மீது சுவரொட்டிகள் போன்றவற்றை ஒட்டக்கூடாது. ரயில் மீதோ, ரயில்வேயின் எந்த ஒரு கட்டமைப்பின் மீதோ சுவரொட்டிகளை ஒட்டுபவா்களுக்கு 6 மாத காலம் வரை சிறைத்தண்டனையோ அல்லது சிறைத்தண்டனையுடன் சோ்த்து ரூ.1,000 அபராதமோ விதிக்கப்படும் அல்லது இரண்டு தண்டனைகளும் ஒன்றாக விதிக்கப்படும்.
மேலும், விதிகளை மீறி விளம்பரம் செய்த 4 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.