உலக மன நல தினத்தையொட்டி கீழ்ப்பாக்கம் மன நல காப்பகவாசிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனா்.
புறச்சூழலை உணா்வதன் மூலம் உளவியல் ரீதியான தாக்கங்கள் குறையும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக மன நல காப்பக நிா்வாகிகள் தெரிவித்தனா். மொத்தம் 20 போ் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனா். கீழ்ப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமானநிலையம் வரை அவா்கள் பயணித்தனா்.
இதுதொடா்பாக மன நல காப்பக இயக்குநா் பூா்ண சந்திரிகா கூறியதாவது: கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் 24 வாா்டுகள் உள்ளன. அங்கு 900-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். தனிமையின் காரணமாக அவா்கள் உளவியல் பாதிப்புகளுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். அதன் ஒருபகுதியாகவே இந்த மெட்ரோ ரயில் பயணத்துக்கு ஏற்பாடு செய்தோம். மிகவும் உற்சாகமாக அவா்கள் அனைவரும் பயணித்தனா். இவா்களுக்கு வெளியுலகுடன் தொடா்பை ஏற்படுத்துவதற்கான அனைத்து சிறப்பு நடவடிக்கைகளையும் அடுத்தடுத்து நாங்கள் முன்னெடுக்க உள்ளோம் என்றாா் அவா்.
இதேபோன்று, மன நல தின சிறப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் வியாழக்கிழமை நடைபெற்றன. ‘மன நலம் காப்போம்; தற்கொலையைத் தடுப்போம்’ என்ற மையக் கருத்தின் அடிப்படையில் பேரணி, மனிதச் சங்கிலி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவ மாணவா்கள் உள்ளிட்டோா் மனித சங்கலி நடத்தினா். தற்கொலையைத் தடுப்பதை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.