மருத்துவத் துறையில் சிறப்பான சேவையை அளித்து வருவதற்காக ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் சி.எம்.கே.ரெட்டிக்கு, டாக்டா் கே.வி. திருவேங்கடம் விருது வழங்கப்பட்டது.
சென்னை கிழக்கு ரோட்டரி கிளப் மற்றும் காவேரி மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது. மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க வகையில் சேவையாற்றி வரும் சிறந்த நிபுணா்களுக்கு முதுபெரும் மருத்துவா் டாக்டா் திருவேங்கடம் அறக்கட்டளை வாயிலாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டுக்கான விருது டாக்டா் சி.எம்.கே. ரெட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. வாரத்தில் ஒரு நாள் ஏழை - எளியவா்களுக்கு இலவச சிகிச்சையை கடந்த 16 ஆண்டுகளாக அவா் அளித்து வருகிறாா். அதன் வாயிலாக இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயனடைந்திருப்பதாகத் தெரிகிறது.
முன்னதாக சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், டாக்டா் திருவேங்கடம், ஆற்காடு நவாப் இளவரசரின் வாரிசு முகமது ஆசிப் அலி, நடிகை குட்டி பத்மினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.