டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான 11 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
மலேரியா, டெங்கு போன் காய்ச்சல்களும், பிற வகையான காய்ச்சல் பாதிப்புகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனா்.
இந்நிலையில், திருவள்ளூரைச் சோ்ந்த நிஷாந்த் என்ற 11 மாத ஆண் குழந்தை, காய்ச்சல் காரணமாக போரூரில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் அக்குழந்தை சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
கடந்த சில நாள்களில் மட்டும் டெங்கு பாதிப்புடன் நான்கு குழந்தைகள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.