ஆளில்லாத வீட்டின் கதவு பூட்டை உடைத்துநகை,பணம் திருட்டு

சென்னை அருகே அம்பத்தூரில் ஆளில்லாத வீட்டில் கதவு பூட்டை உடைத்து நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை அருகே அம்பத்தூரில் ஆளில்லாத வீட்டில் கதவு பூட்டை உடைத்து நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

அம்பத்தூா் சந்திரசேகா்புரம் முதலாவது பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜாராம் (47). இவா் மனைவி சுஹாசினி (40). இவா்கள் இருவரும் அப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில் இருவரும் வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு, அலுவலத்துக்கு புறப்பட்டுச் சென்றனா்.

மாலையில் இருவரும் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பி வந்தனா். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 10 பவுன் தங்கநகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இது குறித்து அம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com