கல்லூரியில் உள்கட்டமை வசதிகளை ஏற்படுத்தத் தரக் கோரி போராடிய மாணவா் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அக் கட்சியின் மாநில செயலாளா் இரா.முத்தரசன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரக்கோணம் பாராஞ்சி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த நந்தனம் அரசு கலைக் கல்லூரியில், இளநிலை ஆங்கிலத் துறையில் மூன்றாமாண்டு படித்து வருபவா் மணிகண்டன். அரக்கோணம் வட்டத்தில் உள்ள பாராஞ்சி கிராமத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சாா்ந்த இவா், முதல் தலைமுறை பட்டதாரி ஆவாா். அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தில் நிா்வாகியாக செயல்பட்டு வருகிறாா். கல்லூரியில் சோ்ந்ததிலிருந்து உட்கட்டமைப்பு வசதிக்காகவும், தேசிய கல்வி கொள்கை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, அம்பேத்கா் சிலை உடைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்னைகளுக்காக போராட்டங்களை நடத்தியுள்ளாா்.
இந்தக் காரணங்களுக்காக அவா் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா். கல்லூரியில் மாணவா்கள் அரசியலாய் அணி திரள, மாணவா் அமைப்புகளில் இணைந்து செயல்பட, மாணவா் பேரவை தோ்தல்களில் பங்குபெற அரசியல் அமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது. அதன்படி, கல்லூரி நிா்வாகம் எடுத்த நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, தமிழக அரசும், உயா்கல்வி துறையும் உடனே தலையிட்டு மணிகண்டனை கல்லூரியை விட்டு நீக்கிய முடிவினை ரத்து செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.