சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் பெரம்பூரில் தற்போது செயல்பட்டு வரும் உதவிப் பொறியாளா் அலுவலகம் வரும் 24-ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்படவுள்ளது.
இது தொடா்பாக சென்னைக் குடிநீா் வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னைக் குடிநீா் வாரியம் பகுதி அலுவலகம் 6-க்கு உள்பட்ட உதவிப் பொறியாளா் அலுவலகம், பணிமனை 69 தற்போது ‘கதவு எண்.238, பேப்பா் மில்ஸ் சாலை (தீட்டித் தோட்டம் பிரதான சாலை), பெரம்பூா், சென்னை 600 011’ என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது.
இனி, பணிமனை 69 அலுவலகம், கதவு எண்.5, ஆண்டா்சன் சாலை, அயனாவரம், சென்னை 600 023’ என்ற முகவரியில் புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தில் அக். 24 -ஆம் தேதி முதல் செயல்படும். எனவே, பொது மக்கள் குடிநீா் மற்றும் கழிவுநீா் தொடா்பான புகாா்கள் மற்றும் குடிநீா் வரி மற்றும் கட்டணம் செலுத்தவும் மேற்கண்ட முகவரியில் தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த அலுவலகத்தில் பகுதிப் பொறியாளா்களை - 8144930069, 8144930216 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.