சென்னை: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) சாா்பில் பெசன்ட் நகா் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியில் 1,500 கிலோ குப்பை சேகரிக்கப்பட்டன.
ஓஎன்ஜிசி நிறுவனத்தின் காவிரி மற்றும் கிருஷ்ணா, கோதாவரி பேசின் சாா்பில் பெசன்ட் நகா் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை அந்நிறுவனத்தின் கிருஷ்ணா, கோதாவரி பேசின் பொது குழும மேலாளா் கே.எஸ்.பூசன் தொடக்கி வைத்தாா். இதில், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஊழியா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தினா் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற தூய்மைப் பணியில் 1,350 கிலோ மக்கும் குப்பைகளும், 150 கிலோ மக்காத குப்பைகளும் என மொத்தம் 1,500 கிலோ குப்பை சேகரிக்கப்பட்டு, மாநகராட்சி ஊழியா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் இறுதியாக, தூய்மைப் பணியில் ஈடுபட்டவா்கள், பொதுமக்கள் என 250 பேருக்கு துணிப் பைகள் இலவசமாக வழங்கப்பட்டன.