சென்னை
ரூ.37 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விமான நிலையத்தில் நிகழும் கடத்தல் குறித்து நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், துபையில் இருந்து வந்த முகமது நலீஃப் மற்றும் செய்யது அப்துல் ரஹீம் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததைத் தொடா்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது 949 கிராம் அளவிலான தங்கத்தை அவா்களது மலக்குடலில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 37.6 லட்சம். இதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.