சிங்கபெருமாள்கோவில் யார்டில் பராமரிப்புப் பணி:  ரயில் சேவையில் நாளை மாற்றம்

சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவில், காட்டாங்குளத்தூர்- சிங்கபெருமாள்கோவில் இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், வரும் புதன்கிழமை (அக். 23) ரயில்
கோப்புப் படம்
கோப்புப் படம்


சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவில், காட்டாங்குளத்தூர்- சிங்கபெருமாள்கோவில் இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், வரும் புதன்கிழமை (அக். 23) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
வரும் புதன்கிழமை மாற்றம் செய்யப்படும் ரயில்கள்: சென்னை கடற்கரை-அரக்கோணம்-சென்னை கடற்கரைக்கு  அக்டோபர் 23-ஆம் தேதி காலை 9.20 மணிக்கு 
இயக்கப்படும் சர்குலர் மின்சார ரயில் கட்டாங்குளத்தூர்-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு அக்டோபர் 23-ஆம் தேதி காலை 9.32, 10.56, நண்பகல் 12.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. 
சென்னை கடற்கரை- செங்கல்பட்டுக்கு அக்டோபர் 23-ஆம் தேதி 10.08,  முற்பகல் 11.48 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் காட்டாங்குளத்தூர்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com