தேஜஸ் ரயில் சேவையில் இன்று மாற்றம்

மதுரை-போடி நாயக்கனூர் பிரிவில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், சென்னை எழும்பூர்-மதுரைக்கு இயக்கப்படும் தேஜஸ் ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை (அக்.22) மாற்றம் செய்யப்படவுள்ளது.
தேஜஸ் ரயில் சேவையில் இன்று மாற்றம்


மதுரை-போடி நாயக்கனூர் பிரிவில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், சென்னை எழும்பூர்-மதுரைக்கு இயக்கப்படும் தேஜஸ் ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை (அக்.22) மாற்றம் செய்யப்படவுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு அக்டோபர் 22-ஆம்தேதி காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் விரைவு ரயில் திருச்சிராப்பள்ளி-மதுரை இடையே  பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் சென்னை  எழும்பூரில் இருந்து திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்.
மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்டோபர் 22-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்பட வேண்டிய  தேஜஸ் விரைவு ரயில் மதுரை-திருச்சி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் திருச்சி இருந்து சென்னை எழும்பூர் வரை மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com