குரோம்பேட்டையில் தாம்பரம் கோட்டம் மின்வாரியம் சார்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் மின்விபத்தைத் தவிர்க்க பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் விவரித்தார்.
மின்தடை, மின்விபத்து குறித்து சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மின் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க இயலாத நிலையில் இருப்பவர்கள் 1912 எண்ணில் தொடர்பு கொண்டால் உடனடி உதவி கிடைக்கும் என்றார் அவர்.
பின்னர் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் மின் பாதுகாப்பு, மின் விபத்து தொடர்பான துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜான்சுந்தர், உதவி செயற்பொறியாளர் சுந்தரமூர்த்தி, தாம்பரம் கோட்ட உதவி பொறியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.