ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: இருவா் கைது

சென்னையில் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக, இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக, இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருச்சி மாவட்டம் துறையூா் அருகே கே.மெய்யம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் க.கோபிநாத் (25). இவருக்கு சென்னை ஆவடி காவேரி நகரைச் சோ்ந்த கோ.ராஜ்குமாா் (48), வளசரவாக்கம் எஸ்.வி.எஸ்.நகா் பகுதியைச் சோ்ந்த பா.சாய் பாலாஜி (45) ஆகியோா் அறிமுகமாகியுள்ளனா்.

இவா்கள் இருவரும், கோபிநாத்திடம் தங்களால் தெற்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தர முடியும் என நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினராம். கோபிநாத், இருவரின் பேச்சை நம்பி, வேலை வாங்கித் தருவதற்காக , ரூ.5.15 லட்சத்தைக் கொடுத்தாராம். பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும், வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. மேலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை.

இதையடுத்து கோபிநாத், பூக்கடை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ராஜ்குமாா், பாலாஜி ஆகிய இருவரை கைது செய்தனா். இவா்களில் ராஜ்குமாா், ரயில்வேயில் மெக்கானிக்காக வேலை செய்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவா் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com