காட்டாங்குளத்தூா் ரயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.இதனால், பயணிகள் சிறிது நேரம் அவதிப்பட்டனா்.
காட்டாங்குளத்தூா் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை காலை 8.15 மணிக்கு திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, காட்டாங்குளத்தூா் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சிக்னல் கோளாறு சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டனா். 45 நிமிஷங்களுக்குப் பிறகு சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து, மின்சார ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் சிறிது நேரம் அவதிப்பட்டனா்.