மகாலிங்கபுரம் கோயிலில் முதல் முறையாக தமிழில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்  - குருவாயூரப்பன் கோயிலில் முதல் முறையாக தமிழில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம் நடைபெறுகிறது.
மகாலிங்கபுரம் கோயிலில் முதல் முறையாக தமிழில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம்


மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்  - குருவாயூரப்பன் கோயிலில் முதல் முறையாக தமிழில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம் நடைபெறுகிறது.

தமிழில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கோயிலின் சோபானம் அரங்கில் தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞ முக்கிய ஆச்சாரியராக இருந்து மும்பை சந்திரசேகர சர்மா வழி நடத்துகிறார்.

21-ஆம் தேதி முதல் காலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு வரை நடைபெறும் நிகழ்ச்சியில் காலை சிற்றுண்டி, மதிய உணவு, தேநீர் சிற்றுண்டி உள்ளிட்ட பக்தர்களுக்கு தேவையான அனைத்தும் ஸ்ரீ ஐயப்ப பக்த சபாவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு 044 - 28171197, 5197, 2197 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளுமாறு கோயிலின் நிர்வாக அதிகாரி அனிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com