ஓமன் நாட்டில் வீட்டு வேலைப் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

ஓமன் நாட்டில் வீட்டு வேலைப் பணிக்கு விண்ணப்பிக்க செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஓமன் நாட்டில் வீட்டு வேலைப் பணிக்கு விண்ணப்பிக்க செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி:

ஓமன் நாட்டில் வீட்டு வேலை பணியாளராகப் பணிபுரிய 30 வயதுக்கு மேற்பட்ட 300 பெண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஏற்கனவே வெளிநாடுகளில் வீட்டு வேலை செய்த அனுபவமுள்ளவர்களுக்கு மாத ஊதியம் ரூ.18,700 முதல் ரூ.22,440 வரையும், வேலை செய்த அனுபவம் இல்லாதவர்களுக்கு மாத ஊதியம் ரூ.17,000 முதல் ரூ.18,700 வரையும் வழங்கப்படும். உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு மற்றும் ஓமன் நாட்டின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு  இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும். 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவச்சான்றிதழ், செல்லத்தக்க கடவுச்சீட்டு ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omchousemaid2019@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது தபால் வாயிலாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண். 42, ஆலந்தூர் சாலை, திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரிக்கு செப்.30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் omcmanpower.com மூலமாகவும் 044-2250 5886, 2250 2267, 82206 34389, 95662 39685 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com